Friday, April 10, 2009

நீண்ட உறக்கம் திடீரென விழிப்பு

நீண்ட உறக்கம் - ஆம் ஒரு வருடத்துக்குப் பின் திடீரென விழிப்பு உண்டானது. நன்றிகள் பல டூ கொங்கு ராசா & திவ்யா. யதேச்சையாக இவர்களது வலைத்தளங்களைப் பார்க்க நேர்ந்தது. மிகவும் இயற்கையாக சரளமாக தங்களது எண்ணங்களை பதிவு செய்துள்ளனர். வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

எங்களூரில் - பெங்களூருவில் தெரு நாய்களின் அட்டகாசம் தொடர்கிறது. அதைத் தடுக்க அரசாங்கம் முழு முயற்சி மேற்கொண்டுள்ளது. நம்புவோமாக ! சில தெரு நாய்கள் குழந்தைகளை வெறித்தனமாக தாக்கின. அதனால், கோபமடைந்த பொது மக்கள் இருபது நாய்களை அடித்துக் கொன்று விட்டனர். இன்று, ஒரு ஆங்கில நாழிதளில் பொது மக்களின் இந்த வெறிசெயலைக் கண்டித்தும் தெரு நாய்களின் உரிமை குறித்தும் ஒரு செய்தி குறிப்பு வெளியாகியுள்ளது. தெரு நாய்களுக்கு உள்ள உரிமை குழந்தைகளுக்கு கிடையாதா? எனது சிற்றறிவுக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. அனைத்து விலங்கு ஆர்வலர்களும் இரண்டு அல்லது ஐந்து தெரு நாய்களை தத்து எடுத்துக் கொள்ளலாம். அவர்களது உயர்ந்த லட்சியமும் நிறைவேறிய மாதிரி இருக்கும்; ஏழைக் குழந்தைகளும் உயிர் பிழைத்து இருப்பர்.

மூன்று நாட்கள் விடுமுறை. என்ன செய்யலாம்? பாதி பெங்களூரு வெளியூர் சென்று விட்டது - இந்த முறை இந்தியாவிற்குள்தான். ஹ்ம்ம்... இதே சென்ற வருடத்தின் போது, வெளிநாடு செல்ல அடிதடி நடந்தது. அதெல்லாம் ஒரு காலம் கண்ணு!

நாங்கள் எங்கும் செல்லவில்லை. எனக்கு விடுமுறை வருவதே வந்ததின் பின்னால் தான் தெரிகிறது. நான் திட்டமிடுதலில் அவ்வளவு திறமைசாலி !

சச்சினின் (தமிழ்த் திரைப்படம்) சில நகைச்சுவைக் காட்சிகளைப் பார்த்து ரசித்தேன். எத்தனையாவது முறை? நினைவில்லை. விஜய்யும் ஜெனிலியாவும் அழகான ஜோடி. விஜய்க்கு இந்த படம் வெற்றியடைந்திருந்தால் அவரது திரைப் பயணமும் வேறு திசையில் சென்றிருக்கும். பேரரசுவும் பிரபு தேவாவும் சிரமப் பட்டிருப்பார்கள். ஆனால் மக்கள் சிரமத்திலிருந்து தப்பித்திருந்திருப்பார்கள். விதியாகப்பட்டது வலியது ! ! !

நோக்கியாவின் புதிய ஈ வரிசை மொபைல் போனுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன்.

மீண்டும் சந்திப்போம். வாழ்க மகிழ்ச்சியுடன்.