Wednesday, February 27, 2008

ஆனந்த விகடன் - பிப் 27, 2008

லெட்டர்ஸ் - ஆ.வி.யின் இரட்டை வேடம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. தொப்பி, திலகம் இருவரது ரசிகர்களும் புலம்பித் தள்ளி விட்டனர். மகாத்மாவிற்கு அடுத்து, இல்லை ..இல்லை.. மகாத்மாவிற்கும் மேலாக குணாதிசயம் கொண்ட இந்த அற்புதப் பிறவிகளைப் பற்றி எப்படி எழுதலாம்? மிகச் சரி. ஜெயமோகன், இனி நீங்கள் தமிழினத் துரோகி என்று அறியப் படுவீர்கள். தமிழினக் காவலர்களின் கேள்விக் கணைகளுக்கு தயாராகுங்கள்.
தமிழக ஊடகங்கள் மிகவும் எச்சரிக்கையானவை. ஒருவனுக்கு ஒருத்தி என்பது தமிழ்ப் பண்பாடு என்று மேடையெல்லாம் முழங்கும் பெரும்பாலான நமது தமிழினக் காவலர்கள் அதை எவ்வளவு தூரம் பின்பற்றுகிறார்கள் என்பது ஊரறிந்த ரகசியம். மறற நாட்டவரும் மறற மாநிலத்தவரும் இது தமிழகத்தின் பாரம்பரியம் என்று நம்மை கேலி செய்வதில் எந்த வியப்பும் இல்லை. ஆனால், நமது ஊடகங்கள் இது பற்றி எழுதியோ பேசியோ நாம் பார்த்ததில்லை. மாறாக, இது ஏதோ மிக இயல்பான நிகழ்வு போல், கண்டு கொள்வேதேயில்லை. சுட்டிக் காட்டியதுமில்லை, காட்டுவதுமில்லை. வாழ்க தமிழக ஊடக தர்மம் .
எங்கோ தொடங்கினேன் எங்கோ சென்று விட்டேன். பொருத்தருளவும். இது போன்று மீண்டும் மீண்டும் ஏற்ப்பட வாய்ப்பு உள்ளதால் பழகிக் கொள்வதும் பொறுத்துக் கொள்வதும் உத்தமம்.

ஆ.வி. இடம் எழுப்பக்கூடாத வினா - ஞானி ஏன் குமுதத்துக்குச் சென்று விட்டார்?

Sunday, February 24, 2008

கூரை - எதற்கு ? ஏன் ?

இந்த தளத்தில் நான் எனது கருத்துக்களை - தமிழைப் பற்றி , தமிழ் நாட்டைப் பற்றி மற்றும் பாரதத்தைப் பற்றி - பகிர்ந்து கொள்ள விழைகிறேன். இயைந்த மற்றும் எதிர் கருத்துக்களையும் வரவேற்கிறேன்.

இன்னொரு முக்கிய விளக்கம்... நான் அரசியல் நிகழ்வுகளை, ஒரு தொலை தூரப் பார்வையாளனகத்தான் இது வரை கண்டு வந்துள்ளேன். நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவனல்லன். படித்த பண்புள்ள எந்த ஒரு இந்தியனும் சேரத் தக்க , ஆதரவு தரத் தக்க அரசியல் கட்சி தற்பொழுது இந்தியாவில் ஏதும் இல்லை என்பது எனது தாழ்மையான கருத்து. எனவே, எனது கருத்துக்கள் எதாவது ஒரு தரப்பினர்க்கு உடன்பாடில்லாமல் அமையலாம். ஏற்கனவே எழுதியபடி, இயைந்த மற்றும் எதிர் கருத்துக்கள், அனைத்தையும் வரவேற்கிறேன் .

தமிழுக்கும், தமிழ் நாட்டிற்கும் மிகப் பெரிய அபாயமே, தமிழினக் காவலர் எனக் கூறிக் கொள்ளும் கூட்டம் தான். இந்த கூட்டத்தை நான் அறிந்து தமிழினம் கூடி தேர்ந்தெடுத்ததாக தெரியவில்லை. தாமாக அறிவித்துக் கொண்டு, தமிழினத்துக்கு பெரும் கேடு விளைவித்துக் கொண்டுள்ளனர்.

தமிழ்த் திரைப்பட நடிக நடிகையரின் தலைவலி, காய்ச்சல் போன்ற நாட்டின் மிக முக்கிய பிரச்சினைகளையெல்லாம் தீர்த்து வைக்க முனைந்து நிற்கும் தமிழ்ப் பத்திரிகைகளுக்கு இது ஒரு பெரிய பிரச்சினையாகத் தெரியாததில், வியப்பு ஒன்றும் இல்லை. இந்தத் தளத்தில் நான் தமிழ்ப் பத்திரிகைகளைப் பற்றியும் விமரிசிக்க உள்ளேன்.