Tuesday, December 29, 2009

தமிழ் நாடும் பீகாரும்

என்ன நண்பர்களே, என்னடா இது, தமிழ் நாடு எங்கே பீகார் எங்கே ... எப்படியப்பா இரண்டையும் ஒன்றாக எழுதலாம்? இருங்க..இருங்க.. நான் எனது கருத்துக்கள் சிலவற்றைக் கீழே கூறியுள்ளேன். படித்துப் பாருங்கள்..பின் முடிவு செய்யுங்கள்..எனது தலைப்பு சரியா அல்லது தவறா?

பீகார் தேர்தல் வன்முறைகளிலும் ஊழல்களிலும் பேர் போனது என்பது இந்தியா முழுவதும் அறிந்த ஒன்று. ஆனால், நமது தமிழகத்தில் பாருங்கள்.. அறிவியல் பூர்வமான தேர்தல்கள். மக்களும் மகிழ்ச்சி... வெற்றி பெற்ற வேட்பாளர்களும் மகிழ்ச்சி..அதாவது ---- வாங்கியவரும் ---- கொடுத்தவரும் ...இரு தரப்பினரும் மகிழ்ச்சியாக உள்ளனர். தேர்தல் ஆணையமும் மகிழ்ச்சி...எந்த மாநிலத்தில் 80 விழுக்காடு வோட்டு பதிவு நடக்கிறது..

பீகாரில் ஆள் கடத்தல் என்பது ஒரு முக்கியமான தொழில்...தமிழகத்தில்.. மக்கள் பிரதிநிதிகளே அதை ஒரு தொழிலாக அங்கீகரித்துள்ளனர். அங்கே பெரும்பாலும் வயிற்றுப்பிழைப்புக்காக செய்கிறார்கள் ...இங்கே அங்கீகரிக்கப்பட்ட ஒரு சாரார் மட்டுமே தொழிலாக செய்கிறார்கள் செய்ய முடிகிறது...

நிதிஷ் குமார் தலைமையில் பீகார் சட்ட ஒழுங்கில் முன்னேறி வருகிறது என்று பேசிக் கொள்கிறார்கள். தமிழகத்தில்... சட்ட ஒழுங்கு என்பதை மக்கள் மறந்து சில பல ஆண்டுகள் ஆகி விட்டன என்று மதியிழந்த சிலர் கூறிக் கொண்டு உள்ளனர்.

பீகாரில் அரசு மக்களுக்கு எந்த உதவிகளும் செய்வதில்லையாம்.. வேலை செய்தால் தான் காசாம்... என்ன கொடுமை இது.. இங்கோ, அரசு சாப்பிட இலவச அரிசி, குடிக்க டாஸ்மாக் (இது மட்டும் இலவசம் இல்லிங்கோ ..) ஓய்வெடுக்கும்போது பார்க்க இலவச டிவி என்று எல்லா வித வசதிகளையும் செய்து கொடுத்து உள்ளது. இருந்தும் புத்தி ஜீவிகள் சிலர் அரசைக் குறை கூறுகின்றனர்.

இன்னும் எழுதிக் கொண்டே போகலாம்...ஆனால் இதன் பின்னரும் சிலர் அரசிடம் குறை கண்டு பிடிக்கலாம். எனது வேண்டுகோள் எல்லாம் ..அரசு அதை பொருட் படுத்தக் கூடாது என்பதுதான்...

வாழ்க தமிழகம்.. வளர்க தமிழனின் சுக போக வாழ்க்கை...

No comments: